
கர்நாடக மாநிலம் பெங்களூர் எச்.எஸ்.ஆர் லே-அவுட்டில் ஓம் பிரகாஷ் என்பவர் வசித்து வந்தார். இவர் முன்னாள் போலீஸ் டிஜிபி. இவரது மனைவி பல்லவி. இந்த தம்பதியினருக்கு கிருதி என்ற மகளும், கார்த்திகேஷ் என்ற மகனும் உள்ளனர். நேற்று முன்தினம் பல்லவி தனது கணவரை கத்தியால் குத்தி கொலை செய்தார்.
இது குறித்து கார்த்திகேஷ் தனது தாய் மற்றும் தங்கை மீது காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் பல்லவியை கைது செய்து விசாரணை நடத்துவதில் அதிர்ச்சி தகவல் தெரியவந்தது.
அதாவது கடந்த 15 ஆண்டுகளாக மன நோய்க்கான சிகிச்சை பெற்று வந்துள்ளார். குடும்ப தகராறு காரணமாக ஓம் பிரகாஷ் தனது மனைவி மற்றும் மகளை துப்பாக்கியை காட்டி மிரட்டியுள்ளார். சம்பவம் நடைபெற்ற அன்று கணவன் மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டது.
இதனால் கோபத்தில் பல்லவி தனது கணவரின் கழுத்தில் கத்தியால் குத்தி கொலை செய்துள்ளார். அவரது செல்போனை கைப்பற்றி போலீசார் சோதனை செய்தபோது தனது தோழி ஒருவருக்கு வீடியோ கால் செய்து கொலை செய்யப்பட்ட தனது கணவரின் உடலை காட்டியுள்ளார்.
மேலும் கூகுளில் கழுத்து பகுதியில் உள்ள எந்த நரம்பு மற்றும் ரத்த நாளங்களை வெட்டினால் ஒருவர் மரணம் அடைவார் என்று பல்லவி தேடியுள்ளார். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.