
சாலையோரத்தில் உள்ள அந்த சாறு கடையில் சுத்தம், மரியாதை, சிரிப்புடன் வரவேற்பு ஆகிய அனைத்தும் இருந்ததால், அந்த கடையை பார்வையிட்ட பெண் ஒருவர் மகிழ்ச்சியில் கூகுள் மேப்ஸில் லதா அம்மாவின் கடையை சேர்த்துள்ளார்.
“எப்போது இந்த பகுதியிலிருந்தாலும் இந்த சர்க்கரைச்சாறு கடையை பார்த்து செல்லுங்கள். மிகவும் இனிமையான, மரியாதையான லதா அம்மா நடத்தும் கடை,” என அவர் பதிவிட்டார்.
Please visit this sugarcane shop anytime you are in the area. Run by the sweetest, most hospitable lady – Latha. Keeps the premises super clean, no flies covering the machine or glasses.
My way of thanking her…also added her business to Google maps. #Banashankari pic.twitter.com/HQo05XyxXC— Poornima Prabhu (@reader_wanderer) April 17, 2025
இந்த பதிவு சமூக வலைதளங்களில் வைரலாக பரவ, மக்கள் லதா அம்மாவின் தூய்மை மற்றும் உழைப்பை பாராட்டத் தொடங்கினர். “சாறுக்கு பயன்படுத்தும் கரும்பு அனைத்தும் ஃபிரிட்ஜில் வைக்கப்படுகிறது, வாடிக்கையாளருக்குப் பிறகு இடத்தை சுத்தம் செய்கிறார்” என ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், லதா அம்மா தினமும் காலை 11 மணி முதல் இரவு 9 மணி வரை கடையை நடத்தி, மாலையில் 4 மணி முதல் இட்லி தோசை மாவும் அரைத்து வீட்டுக்களுக்கும் ஹோட்டல்களுக்கும் வழங்குகிறார் என்பது அனைவரையும் கவர்ந்துள்ளது.
புதிய தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி ஒரு சிறிய வியாபாரிக்கு உதவிய இந்த செயல் அனைவரையும் உணர்ச்சியடையச் செய்தது. “அவரது கடையை Google Maps-ல் சேர்த்தது மிகவும் நல்ல முயற்சி,” என பலரும் பாராட்டினர்.
சிலர், “Swiggyல கூட இவங்க சாறு வரலாமா?” என கேட்டதுடன், “இப்போ அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரிகள் வரி கேட்டா என்ன செய்யுறது?” எனக்கூட கவலை தெரிவித்துள்ளனர். தற்போது, லதா அம்மா இணையவாழ் மக்கள் மத்தியில் நாயகியாக வலம் வருகிறார்.