உத்தரப் பிரதேசம் மாநிலம் ஹத்ராஸில் மத நிகழ்வு ஒன்றின் பொது  ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் பலியானது நாடு முக்குவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த நிலையில், இந்த சம்பவம் குறித்து அம்மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்த சம்பவம் குறித்து ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதியை கொண்டு நீதி விசாரணை நடத்தப்படும்.

இந்த நீதி விசாரணைக் குழுவில் ஓய்வு பெற்ற அதிகாரிகள் மற்றும் காவல்துறை அதிகாரிகளும் இடம் பெறுவார்கள். இந்த சோகத்திற்கு யார் காரணம்? என்பதை கண்டறிவது மட்டுமல்லாமல், இதில் சதி ஏதும் உள்ளதா? என்பது குறித்தும் விசாரணை நடத்தப்படும்” என்று குறிப்பிட்டுள்ளார்.