
இஸ்ரேல் பாலஸ்தீனம் எது தொடர் தாக்குதல் நடத்தி வருவதால் பெண்கள், குழந்தைகள் உட்பட 43 ஆயிரத்துக்கும் அதிகமான மக்கள் உயிரிழந்தனர். ஒரு லட்சத்துக்கும் அதிகமான மக்கள் படுகாயம் அடைந்தனர். அடிப்படை சுகாதார வசதிகள் உணவு இல்லாமல் குழந்தைகளுடன் பெண்கள் அவதிப்படுகின்றனர். இந்த நிலையில் உலக சுகாதார அமைப்பின் முயற்சியின் அடிப்படையில் காசாவில் இருக்கும் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து செலுத்தப்பட்டு வருகிறது.
இரண்டு கட்டமாக நடந்து முடிந்த சொட்டு மருந்து முகாம்களில் 4 லட்சத்திற்கும் அதிகமான குழந்தைகள் பயனடைந்தனர். இந்த நிலையில் மூன்றாவது கட்ட சொட்டு மருந்து முகாம்களை நடத்த திட்டமிட்டனர். அதன்படி நேற்று வடக்கு காசாவில் ஷேக் ரத்வான் ஆரம்ப சுகாதார நல மையத்தில் மூன்றாம் கட்ட சொட்டு மருந்து முகாம் நடைபெற்றது. அந்த சுகாதார மையம் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதால் நான்கு குழந்தைகள் உட்பட ஆறு பேர் காயமடைந்தனர்.
உலக சுகாதார அமைப்பின் இயக்குனர் ஜெனரல் டெட்ரோஸ் அதானம் இந்த தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். போலியோ சொட்டு மருந்து முகாமுக்கு போர் நிறுத்தம் ஏற்படுவதற்கான ஒப்புதலுக்கு அனுமதி அளிக்கப்பட்ட நிலையில் இந்த தாக்குதல் குழந்தைகளுக்கு சுகாதார பாதுகாப்பு அளிப்பதற்கான புனித தன்மைக்கு தீங்கு விளைவிக்கும் என கூறியுள்ளார்.