திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் கொழுமம் என்னும் பகுதியில் அயப்பன் என்பவர் வசித்து வருகிறார். இவர் அதே பகுதியை சேர்ந்த கோவில் ஒன்றில் பூசாரியாக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் இவர் கடந்த 2021 ஆம் ஆண்டு கோவிலில் பூஜை செய்துக் கொண்டிருந்த போது அங்கு வந்த 14 வயது சிறுமியை வலுக்கட்டாயமாக பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதனால் சிறுமி கர்ப்பமானதையடுத்து அவரது பெற்றோர் மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

அந்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து கோவில் பூசாரியை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்ததுடன் அவரை சிறையில் அடைத்தனர்.

தற்போது இது தொடர்பான வழக்கு திருப்பூர் மாவட்ட மகளிர் கோட்டில் விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி அவருக்கு 40 ஆண்டு சிறை தண்டனையுடன் ரூபாய் 17,000 அபராதமும் விதித்து உத்தரவிட்டார்.