
எண்ணூர் வஉசி நகரை சேர்ந்தவர் டானியல்(37). இவருக்கு ஸ்டெல்லா ராணி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு மோசஸ்(12) என்ற மகனும், ஸ்வீட்டி என்ற மகளும் இருந்துள்ளனர். நேற்று இவர்கள் அம்பத்தூரில் இருந்து தேவாலயத்திற்கு சென்றுள்ளனர். பின்னர் மீண்டும் வீடு திரும்பியுள்ளனர்.
இந்த நிலையில் மணலி விரைவு சாலையில் சாத்தாங்காடு அருகே சென்ற போது எதிர்பாராதவிதமாக கண்டெய்னர் லாரி மோட்டார் சைக்கிள் மோதியது. இந்த விபத்தில் படுகாயம் அடைந்த டேனியலும், மோசஸ்ஸும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். ஸ்டெல்லா ராணியும், சுவீட்டியும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர் இந்த விபத்து குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.