சென்னை மாதாவரம் மாத்தூர் முதல் பிரதான சாலையில் உள்ள பிரபல உணவகத்தில் செங்குன்றத்தை சேர்ந்த ரியல் எஸ்டேட் தொழில் செய்யும் நந்தகுமார் என்ற நபர் சாம்பார் சாதம் ஆர்டர் செய்து சாப்பிட்டு கொண்டிருந்தார்.

பாதி சாப்பிட்ட நிலையில் சாதத்தில் கம்பளி பூச்சி கிடப்பதைக் கண்டு அதிர்ந்து போனார். இதனைத் தொடர்ந்து பணியில் இருந்த உணவகம் மேலாளரிடம் இது குறித்து கேட்டபோது, கம்பளி பூச்சி இல்லை, ஒரு காய்கறி வகை தான் என்று அவர் கூறியுள்ளார். காய்கறிக்கும் கம்பளி பூச்சிக்கும் வித்தியாசம் தெரியாதா என்று கேட்டு வாக்குவாதம் செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.