
விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகே இருக்கும் கிராமத்தைச் சேர்ந்தவர் அழகு பாண்டி(44). இவர் பால் பாக்கெட் போடும் வேலை பார்த்து வந்தார். இவர் 17 வயது சிறுமியின் நெருக்கமாக பழகி வந்தார். கடந்த 2023-ஆம் ஆண்டு மே மாதம் அழகு பாண்டி சிறுமியை கடத்தி சென்று திருமணம் செய்துள்ளார். அதன் பிறகு சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தார்.
இதுகுறித்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் அழகு பாண்டியை கைது செய்தனர். இந்த வழக்கு ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றத்தில் நடந்தது. இந்த வழக்கினை விசாரித்த நீதிமன்றம் அழகு பாண்டிக்கு 20 ஆண்டுகள் ஜெயில் தண்டனையும், 3000 ரூபாய் அபராதமும் விதித்து உத்தரவு பிறப்பித்தது.