
சமையல் கேஸ் சிலிண்டருக்கு300 ரூபாய் மானியம் வழங்கும் திட்டம் விரைவில் தொடங்கப்படும் என்ற புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி அறிவித்துள்ளார். அரசு விழாவில் முதலமைச்சர் ரங்கசாமி பேசியபோது, புதுவை அரசு பல நல்ல திட்டங்களை செயல்படுத்தி வருகின்றது. குடும்பத் தலைவிகளுக்கு ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளோம்.
இந்த திட்டத்தின் கீழ் 70 ஆயிரம் குடும்பத்தலைவிகள் பயன்பெறும் வகையில் செயல்படுத்த உள்ளோம். அதனைப் போலவே பெண் குழந்தைகளுக்கு ஐம்பதாயிரம் வைப்பு நிதி வழங்கும் திட்டம், நடைமுறையில் உள்ள திட்டத்தையும், அறிவித்த திட்டங்களையும் செயல்படுத்துவோம் என்று தெரிவித்துள்ளார்