
உத்திரபிரதேச மாநிலம் நொய்டா நகர் அருகே செக்டார் 94 பகுதியில் பிரேத அறை ஒன்று அமைந்துள்ளது. இதில் பல உடல்கள் அடுக்கி வைக்க ப்பட்டிருக்கின்றன. தற்போது அந்த அறையில் ஒரு ஜோடி பாலியல் உறவில் ஈடுபடும் காட்சி வீடியோவாக இணையத்தில் வைரலானது. அந்த வீடியோவில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த உடல்கள் அருகே ஜோடி பாலியல் உறவில் ஈடுபட்டு உல்லாசமாக இருந்ததாக காட்சிகள் உள்ளது. இந்த வீடியோ வைரலான நிலையில் அதனை கண்ட சுகாதாரத் துறை அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர். அதன் பின் அந்த அறையை சுற்றி சிசிடிவி கேமராக்கள் பொறுத்த முடிவு எடுத்தனர். அதன்படி அந்த அறையில் சுற்றி 12 இடங்களில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இதை கட்டுப்பாட்டு அறை மூலம் கண்காணிக்கப்படும் என்றும் சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த வீடியோவில் காணப்பட்ட துப்புரவு தொழிலாளியான ஷேர்சிங், வீடியோவை படம் பிடித்த தூய்மை பணியாளர் ஆன பர்வேந்திரா மற்றும் பாதுகாவலரான பானு காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர். அதோடு புதிய குற்ற சட்டத்தின் கீழ் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தி வரும் நிலையில் இந்த 3 பேரும் பணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர் என டாக்டர் ஜெய்ஸ் லால் கூறியுள்ளார். மேலும் பிரேத அறைக்கு அத்துமீறி நுழைந்து இவ்வாறு செய்த காரியத்தால் வைக்கப்பட்டிருக்கும் உடல்கள் பாதிக்கப்படக்கூடிய சூழலும், பிரேத பரிசோதனை அறிக்கைகள் பாதுகாப்பிற்கும் பாதிப்பு ஏற்படும். எனவே அரசு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டு வருகிறது.