உலகில் மக்கள் தொகை அதிகரிப்பால் சுற்றுப்புற சூழலுக்கு பெறும் பிரச்சனை எழுந்துள்ளது. இதனால் இயற்கை செல்வங்கள் அளிக்கப்படுகின்றன. பொருளாதாரம் முன்னேற்றம் என்ற பெயரில் வனப்பகுதி பெரும்பாலும் அழிக்கப்பட்டு வருகிறது. இதனால் இயற்கை சூழல் கெடுவது மட்டுமல்லாமல் மழையும் குறைந்து வளமான நிலங்கள் வறண்ட பாலைவனமாக மாறிக் கொண்டிருக்கின்றன.

தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறக்கூடிய கழிவு பொருட்கள் மற்றும் கழிவுநீர் ஆறுகள் மற்றும் நீர் நிலைகளில் கலப்பதால் நீர் மாசு ஏற்படுகின்றது. சுற்றுச்சூழல் மாசுபடுவதால் நாம் சந்திக்கும் மிகப்பெரிய சவால் பூமி வெப்பமடைதல் ஆகும். வெப்பநிலை அதிகரிப்பால் அடுத்த 30 முதல் 50 ஆண்டுகளில் கடலில் உள்ள பவளப்பாறைகள் அழிய நேரிடும். வெப்பநிலை அதிகரிப்பு காரணமாக துருவப்பிரதேசங்களில் உள்ள பனிப்பாறைகள் உருகி கடலில் கலப்பதால் கடலில் நீர்மட்டமும் உயரும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.