
சென்னை மேற்கு மாம்பலத்தில் பெற்ற குழந்தைகளையே கொன்று விட்டு தந்தை தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இரும்பு வியாபாரம் செய்து வந்த மோகன்ராஜ்க்கு (47) மனைவி யமுனா மீது சந்தேக பார்வை இருந்துள்ளது. அது நாளடைவில் பூத கரமாக மாறிய நிலையில் 14 வயது மகளையும் ஆறு வயது மகனையும் கொன்றுவிட்டு தற்கொலை செய்து கொண்டார் மோகன்ராஜ். இது பற்றி மோகன்ராஜ் எழுதிய கடிதமும் சிக்கியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.