
திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள கொடைக்கானல் ரைஃபில் ரேஞ்ச் சாலை வ.உ.சி நகரை சேர்ந்தவர் ஆறுமுகம். இவர் கூலி வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி வினோலியா. இந்த தம்பதியினருக்கு சரண்யா, சந்தியா என்ற இரண்டு மகள்கள் இருந்துள்ளனர். இதில் எட்டாம் வகுப்பு படிக்கும் சரண்யா நீண்ட நேரம் செல்போன் உபயோகப்படுத்தியுள்ளார். இதனால் பெற்றோர் சரண்யாவை கண்டித்தனர்.
கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு வீட்டில் யாரும் இல்லாத நேரம் சரண்யா விஷம் குடித்த மயங்கி விழுந்தார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் சரண்யாவை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று சரண்யா பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.