பிரதமர் நரேந்திர மோடி வருகிற ஜனவரி 15-ஆம் தேதி செகந்திராபாத் மற்றும் விசாகப்பட்டினம் இடையேயான அதிவேக விரைவு ரயில் கொடியசைத்து தொடங்கி வைக்க உள்ளார். இந்நிலையில் இந்த ரயில் பெட்டியின் மீது மர்ம நபர்கள் கல் வீசி நடத்திய தாக்குதலில் கண்ணாடி ஜன்னல்கள் உடைந்ததாக கூறப்படுகிறது. இது குறித்து ரயில் பாதுகாப்பு படையினரின் முதல் கட்ட விசாரணையில், புதன்கிழமை இரவு காஞ்சிரபாலத்தில் உள்ள கோச் வளாகத்தின் அருகே விளையாடிக் கொண்டிருந்த குழந்தைகள் சில ரயில் மீது கற்களை வீசி இருக்கலாம். இதன் காரணமாக ரயில் பெட்டியின் கண்ணாடி உடைந்து இருக்கலாம் என கூறப்படுகிறது.

வந்தே பாரத் ரயில் புதன்கிழமை பராமரிப்பு சோதனைக்காக சென்னையில் இருந்து விசாகப்பட்டினம் வந்தது. நாகப்பட்டினம் வந்தவுடன் ரேக் கஞ்சிரபாலத்தில் உள்ள புதிய கோர்ஸ் வளாகத்திற்கு மாற்றப்பட்டது. அங்கு தான் இந்த சம்பவம் நடைபெற்றதாக போலீசார் கூறியுள்ளனர். இது குறித்து விசாகப்பட்டினம் போலீசார் மற்றும் ஆர்.பி.எப் விசாரணை நடத்தி வருகிறது. இதில் ஒரு ஜன்னல் கண்ணாடி முழுவதுமாக உடைந்த நிலையில் தற்போது மற்றொரு கண்ணாடியில் சிறிய விரிசல் ஏற்பட்டுள்ளது. இந்த சம்பவத்தை தொடர்ந்து அந்த பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட உள்ளதாக அதிகாரி கூறியுள்ளார்.