
நாடு முழுவதும் விவசாயிகளுக்கு பிஎம்பிகிசான் திட்டத்தின் கீழ் ஒவ்வொரு வருடமும் 6000 ரூபாய் நிதி உதவி வழங்கப்பட்டு வருகிறது. இந்த தொகை 2000 ரூபாய் வீதம் 3 தவணைகளாக விவசாயிகளின் வங்கி கணக்கில் நேரடியாக டெபாசிட் செய்யப்படுகிறது.
இந்தத் திட்டத்தின் கீழ் இதுவரை 16 தவணைகள் வழங்கப்பட்டுள்ள நிலையில் 17வது தவணை குறித்த எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. தற்போது மோடி மூன்றாவது முறையாக பிரதமராக பதவியேற்று உள்ள நிலையில் 17வது தவணை வழங்க ஒப்புதல் அளித்துள்ளார். இதனைத் தொடர்ந்து இந்த மாதம் இறுதிக்குள் வங்கி கணக்கில் பணம் செலுத்தப்படும் என கூறப்படுகிறது.