
சென்னை மாவட்டம் தும்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் யோகேஸ்வரன்(33). இவர் திருமுல்லைவாயில் பகுதியில் மெக்கானிக் கடை நடத்தி வருகிறார். கடந்த 2012-ஆம் ஆண்டு யோகேஸ்வரன் ஹிந்தி டியூஷனுக்கு சென்றார். அப்போது பொன்னேரியை சேர்ந்த 39 வயது பெண்ணை காதலித்து வந்தார். பின்னர் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தைகள் கூறி அவருடன் உல்லாசமாக இருந்துள்ளார்.
இதனையடுத்து தன்னைவிட 6 வயது அதிகமாக இருப்பதாக கூறி யோகேஸ்வரன் அந்த பெண்ணை திருமணம் செய்து கொள்ள மறுப்பு தெரிவித்துள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு யோகேஸ்வரனுக்கு வேறு ஒரு பெண்ணுடன் நிச்சயமானது. இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் யோகேஸ்வரனை கைது செய்து சிறையில் அடைத்தனர். நாளை மறுநாள் வேறு ஒரு பெண்ணுடன் அவருக்கு திருமணம் நடைபெற இருந்தது. போலீசார் யோகேஸ்வரனை கைது செய்து சிறையில் அடைத்ததால் திருமணம் நின்று போனது.