
தென்மேற்கு பருவமழை தற்போது தீவிரமடைந்து உள்ள நிலையில் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களிலும் தொடர்ந்து பரவலாக கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக கோவை மற்றும் நீலகிரி மாவட்ட மலைப்பகுதிகளில் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. இந்த நிலையில் தமிழகத்தில் அடுத்த மூன்று மணி நேரத்திற்கு 32 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
அதன்படி திருவள்ளூர், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, சென்னை, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, குமரி, தென்காசி, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், குமரி, பெரம்பலூர், அரியலூர், கடலூர், நாகை, நீலகிரி, கோவை, ஈரோடு, திருப்பத்தூர் உள்ளிட்ட மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டது.