
யார் எந்த தடை போட்டாலும் தமிழ்த்தாய் வாழ்த்து எங்களுக்கு முக்கியமானது என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். ஆட்டுக்கு தாடியும், நாட்டுக்கு ஆளுநரும் தேவையா என அண்ணா கேட்டார், அதை தற்போது ஆளுநர் மெய்ப்பித்து வருகிறார். தமிழ்த்தாய் வாழ்த்து பாடக்கூடாது என யாரும் கூற முடியாது. இனி அரசு நிகழ்ச்சி மட்டுமல்ல கட்சி கூட்டங்களிலும் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்படும். அதனை யாரும் தடுக்க முடியாது என தெரிவித்துள்ளார்.