தமிழகத்தின் வட உள் மாவட்டங்களான வேலூர், காஞ்சிபுரம், தர்மபுரி, சேலம், நாமக்கல், கரூர், ஈரோடு, நீலகிரி, கோவை, திருப்பூர், திருச்சி, அரியலூர் மற்றும் பெரம்பலூர் உள்ளிட்ட 18 மாவட்டங்களில் வெயில் சுட்டெரிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இதனால் இன்றும் நாளையும் ஒரு சில இடங்களில் வெயில் இயல்பை விட ஐந்து டிகிரி வரை அதிகரிக்க கூடும் என்று நிர்வாக ரீதியாக ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.