
தமிழகத்தில் வருகிற 15ஆம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கும் நிலையில் சமீப காலமாகவே பல்வேறு மாவட்டங்களில் கன மழை என்பது பெய்து வருகிறது. அந்த வகையில் இன்று தமிழகத்தில் 17 மாவட்டங்களில் கன மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி இன்று தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் உள்ளிட்ட பகுதிகளில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது.
அதன் பிறகு விருதுநகர், சிவகங்கை, மதுரை, தேனி, விருதுநகர், புதுக்கோட்டை, திருப்பூர், திண்டுக்கல், கோயம்புத்தூர், நீலகிரி, கரூர், திருச்சி, நாமக்கல், ஈரோடு, சேலம், தர்மபுரி, நாமக்கல், கிருஷ்ணகிரி மற்றும் திருப்பத்தூர் ஆகிய மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. சென்னையை பொருத்தவரை ஒரு சில இடங்களில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படுவதோடு நகரின் சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் நேற்று தமிழகத்தில் தென் மாவட்டங்களில் பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்தது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.