அரபிக்கடலில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழ்நாட்டில் ஜனவரி 1ஆம் தேதி வரை லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. இதேபோன்று புதுச்சேரியிலும் மழைக்கு வாய்ப்புள்ளது. அதோடு வடகிழக்கு பருவமழை இன்னும் தீவிரமடைய வாய்ப்புள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் இன்று காலை 10 மணி வரையில் தமிழ்நாட்டில் 5 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தற்போது சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் அதன்படி சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், கடலூர் மற்றும் சேலம் ஆகிய மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.