தமிழகத்தில் இன்று மற்றும் நாளை ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி இன்று மற்றும் நாளை தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது. அதன்பிறகு இன்று தமிழகத்தில் நாகை, திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, தென்காசி, தேனி, நீலகிரி, கோவை ஆகிய 8 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி கரையை கடந்துள்ள நிலையில் இன்று தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று வலுவான தரைக்காற்று மணிக்கு 30 முதல் 40 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும். மேலும் தமிழகத்தில் செப்டம்பர் 6-ம் தேதி வரை மழை நீடிக்கும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.