
தமிழகத்தில் ரேஷன் கடைகள் மூலமாக மக்களுக்கு இலவசமாகவும் மலிவு விலையிலும் உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. பொதுமக்கள் அனைவருக்கும் தடையின்றி இலவச ரேஷன் அரிசி வழங்க வேண்டும் என தமிழக அரசு அதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. ஆனால் ரேஷன் கடை ஊழியர்கள் இலவச ரேஷன் அரிசியை பொதுமக்களுக்கு முறையாக வழங்காமல் அதிக விலைக்கு வெளி மாநிலங்களில் விற்பனை செய்வதாக தொடர்ந்து புகார்கள் எழுந்துள்ளது.
இதனை கட்டுப்படுத்தும் விதமாக அரிசி மூட்டைகள் மற்றும் சர்க்கரை மூட்டை மற்றும் பருப்பு பாக்கெட் ஆகிய அனைத்திலும் தமிழக அரசின் முத்திரை மற்றும் கியூ ஆர் கோடு பதிப்பதற்கு அரசு திட்டமிட்டுள்ளது. இவ்வாறு அரசு முத்திரை மற்றும் கியூ ஆர் கோடு பதிக்கப்பட்ட ரேஷன் பொருட்கள் கடத்தப்பட்டால் அல்லது வெளி மாநிலங்களில் அதிக விலைக்கு விற்பனை செய்யப்பட்டால் பொதுமக்கள் யாரும் அதனை வாங்க கூடாது என்று அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும் ரேஷன் பொருட்கள் கடத்தல் மற்றும் பதுக்கள் தொடர்பாக பொதுமக்கள் 1800 599 5950 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம் எனவும் அரசு தெரிவித்துள்ளது.