
தமிழகத்தில் வார இறுதி நாட்கள் மற்றும் பண்டிகை நாட்களில் சிறப்பு பேருந்துகள் மற்றும் ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. பொதுவாகவே இது போன்ற நாட்களில் மக்கள் அதிகம் சொந்த ஊருக்கு பயணம் செய்வார்கள் என்பதால் கூட்ட நெரிசலை தவிர்க்க அரசு கூடுதல் பேருந்துகளை இயக்கி வருகின்றது. அதன்படி ஆகஸ்ட் 26, 27 மற்றும் 29 ஆகிய தேதிகளில் வார இறுதி நாட்கள் மற்றும் ஓணம் பண்டிகை ஆகியவை காரணமாக மதுரை, தேனி, திருச்சி, சேலம், உதகை ஆகிய பகுதிகளுக்கு சுமார் 700 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக தமிழ்நாடு போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது.