தமிழகத்தில் இன்று முதல் அடுத்த மூன்று நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக சென்னையில் அடுத்த 24 மணி நேரத்திற்கு ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும்.
அதனைப் போலவே ஜூலை மூன்றாம் தேதி நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல் மற்றும் தென்காசி ஆகிய ஆறு மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் கேரளாவில் கடந்த சில நாட்களுக்கு முன்பு தென்மேற்கு பருவமழை தொடங்கிய நிலையில் தமிழகத்திலும் அதன் எதிரொலியாக மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.