
தமிழகத்தில் நேற்று இரவு ஒரு சில இடங்களில் கன மழை கொட்டி தீர்த்தது. குறிப்பாக சென்னை சுற்றுவட்டார பகுதிகளில் இரவு முழுக்க இடியுடன் கூடிய கனமழை பெய்தது. இந்நிலையில் இன்று விழுப்புரம், நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், கள்ளக்குறிச்சி மற்றும் கடலூர் உள்ளிட்ட 8 மாவட்டங்களில் பல்வேறு இடங்களில் கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதனைப் போலவே செங்கல்பட்டு பகுதியில் இன்றும் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.