சுப முகூர்த்த தினங்களில் அதிகளவு ஆவண பதிவுகள் நடைபெறும். அன்றைய தினம் பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று ஆவணப்பதிவுக்காக கூடுதல் முன்பதிவு டோக்கன்கள் ஒதுக்கீடு செய்யப்படுவது வழக்கம். அந்த வகையில் இன்று முகூர்த்த நாள் என்பதால் பத்திரப்பதிவு அலுவலகங்களில் கூடுதல் டோக்கன்கள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் ஒரு சார்பதிவாளர் உள்ள அலுவலகங்களுக்கு 100-க்கு பதிலாக 150 முன்பதிவு டோக்கன்கள் வழங்கப்படும். இரண்டு சார்பதிவாளர்கள் உள்ள அலுவலகங்களுக்கு 200-க்கு பதிலாக 300 முன்பதிவு டோக்கன்கள் வழங்கப்படும் என பதிவுத்துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.