தமிழக கவர்னரான ஆர்.என் ரவியின் பதவிக்காலம் இன்றுடன் முடிகிறது. இந்நிலையில் மீண்டும் அவரே கவர்னராக நீடிக்கப்படுவாரா என்ற கேள்வி எழுகிறது. இதற்கிடையில் தமிழக கவர்னர், பிரதமர் மோடி மற்றும் உள்துறை மந்திரி அமித்ஷா உள்ளிட்ட சிலர் சமீபத்தில் டெல்லியில் சந்தித்து பேசினார்கள்.

இதைத்தொடர்ந்து அங்கு நடக்கவிருக்கும் கவர்னர்கள் மாநாட்டில் ஆ.என் ரவி பங்கேற்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. இன்றுடன் அவரது பதவி காலம் முடிவு பெறும் நிலையில் அவரது பதவிக்காலம் நீடிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதையடுத்து புதிய கவர்னர் நியமிக்கப்படுவது குறித்து எந்த ஒரு தகவலும் வெளியாகவில்லை என்பதால் அவரே கவர்னராக தொடர்வார் என கூறப்படுகிறது.