
தமிழகத்தில் முக்கிய பண்டிகை நாட்கள் மற்றும் வார இறுதி நாட்களை முன்னிட்டு மக்களின் வசதிக்காக அரசு சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. அதன்படி தற்போது வார இறுதி நாட்களில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது.
சென்னை கிளாம்பக்கத்திலிருந்து திருச்சி, மதுரை, திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, கோவை, சேலம் மற்றும் ஈரோடு ஆகிய மாவட்டங்களுக்கு வெள்ளிக்கிழமை 275 பேருந்துகளும், சனிக்கிழமை 315 பேருந்துகளும் இயக்கப்படும். சென்னை கோயம்பேட்டில் இருந்து திருவண்ணாமலை, நாகை மற்றும் பெங்களூராகிய மாவட்டங்களுக்கு வெள்ளிக்கிழமை 55 பேருந்துகளும் சனிக்கிழமை 55 பேருந்துகளும் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.