
தமிழகத்தில் கோடை காலம் தொடங்கும் நிலையில் வெயிலின் தாக்கம் என்பது அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. கடந்த பிப்ரவரி மாதம் முதலே வெயிலின் தாக்கம் அதிகரிக்க தொடங்கிவிட்டது. அதே நேரத்தில் டெல்டா மற்றும் தென் மாவட்டங்களில் மழையும் பெய்து வருகிறது. கொளுத்தும் வெயிலுக்கு மத்தியில் சில இடங்களில் மழை பெய்வது மக்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் இன்று முதல் வருகிற 26 ஆம் தேதி வரை தமிழ்நாட்டில் வெயிலின் தாக்கம் சற்று அதிகமாகவே இருக்கும் என்றும் நண்பகல் 12 மணி முதல் பிற்பகல் 3:00 மணி வரை கர்ப்பிணி பெண்கள், முதியவர்கள் மற்றும் குழந்தைகள் தேவையில்லாமல் வெளியே வருவதை தவிர்க்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
வெயிலின் தாக்கம் இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கும் என்றும் சென்னையில் அதிகபட்ச வெப்பநிலை 99 டிகிரி செல்சியஸ் ஆகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 82 டிகிரி செல்சியஸ் ஆகவும் இருக்கக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் தமிழகத்தில் வருகிற 26 ஆம் தேதி வரை ஒரு சில இடங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோன்றுதான் புதுச்சேரி மற்றும் காரைக்காலிலும் வானிலை இருக்கும்.
மேலும் தமிழகத்தில் நேற்று பல்வேறு இடங்களில் வெயிலின் தாக்கம் அதிகரித்து இருந்ததோடு வெப்பநிலை சதம் அடித்தது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.