தமிழகத்தில் ரேஷன் கடைகள் மூலமாக ஏழை எளிய மக்களுக்கு இலவசமாகவும் மலிவு விலையிலும் உணவுப் பொருள்கள் வழங்கப்பட்டு வருகிறது. இதனிடையே கடந்த மே மாதம் ரேஷன் கடைகளில் சில பொருள்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டதால் மே மாதத்திற்கான பாமாயில் மற்றும் துவரம் பருப்பு ஆகியவற்றை ரேஷன் அட்டைதாரர்கள் ஜூன் மாதம் முதல் வாரத்தில் பெற்று கொள்ளலாம் என தமிழக அரசு ஏற்கனவே அறிவித்தது.

இந்த நிலையில் 82.82 லட்சம் அட்டைகளுக்கு தலா ஒரு கிலோ துவரம் பருப்பு, 75.87 லட்சம் அட்டைகளுக்கு தலா ஒரு லிட்டர் பாமாயில் வழங்குவதற்காக பொருட்கள் அனுப்பப்பட்டுள்ளன. இதனால் மே மாதம் பருப்பு மற்றும் பாமாயில் வாங்காதவர்கள் ஜூன் மாதத்தில் தடையின்றி பெறலாம் என அதிகாரிகள் கூறியுள்ளனர்.