
தமிழகத்தில் பள்ளி கல்லூரி மாணவர்கள் பயன்பெறும் விதமாக அரசு ஏராளமான திட்டங்களை செயல்படுத்தி வரும் நிலையில் அரசு பள்ளியில் படித்த உயர்கல்வியில் சேரும் மாணவர்களுக்கு உதவும் வகையில் மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டத்தை அரசு செயல்படுத்தி வருகிறது. ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டத்தை அரசு செயல்படுத்தி வருகிறது. ஏற்கனவே மாணவிகளுக்கு ஆயிரம் ரூபாய் உதவித்தொகை வழங்கும் திட்டம் செயல்பாட்டில் உள்ள நிலையில் நேற்று மாணவர்களுக்கு ஆயிரம் ரூபாய் வழங்கும் தமிழ் புதல்வன் திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆறு முதல் 12 ஆம் வகுப்பு வரை தமிழ் வழியில் படித்து தேர்ச்சி பெற்று கல்லூரியில் படிக்கும் அனைத்து மாணவர்களுக்கும் இந்த திட்டம் பொருந்தும். பட்டப்படிப்பு, பொறியியல் படிப்பு, மருத்துவ படிப்பு மற்றும் சட்டம் படிக்கும் மாணவர்கள் இந்த திட்டத்தில் பயன்பெறலாம். 8, 10 ஆம் வகுப்பு முடித்து தொழிற் பயிற்சி படிப்பவர்களும் இதன் மூலமாக பயன்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.