கரூர் மாவட்டத்தில் உள்ள ரத்தினம்பிள்ளை புதூர் பகுதியில் சரவணன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சரோஜா என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் அதே பகுதியைச் சேர்ந்த வீரப்பன், அவரது மனைவி லட்சுமி, மகன்கள் மனோகரன், ராஜேந்திரன் ஆகிய நான்கு பேரும் இணைந்து சரவணனையும், அவரது மனைவி சரோஜாவையும் தகாத வார்த்தைகளால் திட்டி தாக்கியுள்ளனர்.

மேலும் கொலை மிரட்டல் விடுத்து விட்டு அங்கிருந்து சென்றனர். இதுகுறித்து சரோஜா காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வீரப்பன் உட்பட 4 பேர் மீது போலீசார் வழக்குபதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.