உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள கான்பூரில் ஒரு பெண் திருமண நிகழ்ச்சிக்கு சென்று விட்டு இரவு மீண்டும் வீட்டிற்கு வந்தார். அப்போது அதிவேகமாக வந்த கார் அந்த பெண் மீது மோதியது. மேலும் சிறிது தூரம் அந்த பெண்ணை கார் இழுத்துச் சென்றது. கார் டிரைவர் குடிபோதையில் இருந்ததாக தெரிகிறது.

இந்த பயங்கர விபத்து அந்த பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. உயிருக்கு போராடிக் கொண்டிருந்த அந்த பெண்ணை அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் கார் டிரைவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.