திருப்பூர் ரயில் நிலையம் அருகே மது போதையில் மாற்றுத்திறனாளி முதியவர் ஒருவர் தண்டவாளத்தை கடக்க முயற்சி செய்துள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக மாற்றுத்திறனாளி முதியவர் தண்டவாளங்களுக்கு நடுவே சிக்கிக்கொண்டார்.

இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் பொதுமக்கள் உதவியுடன் மாற்றுத்திறனாளி முதியவரை பத்திரமாக மீட்டனர். இந்த சம்பவம் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.