
டெல்லியில் உள்ள ஆக்ராவில் உலகப்புகழ் பெற்ற தாஜ்மஹால் அமைந்துள்ளது. இங்குள்ள மசூதி வளாகத்தில் முகம் சிதைக்கப்பட்ட நிலையில் இளம்பெண் சடலம் மீட்கப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது தாஜ்மஹால் அருகே உள்ள மசூதியில் உடல் முழுவதும் காயங்களுடன் அரை நிர்வாணத்தில் முகம் சிதைக்கப்பட்ட நிலையில் பெண்ணின் சடலம் கிடந்துள்ளது.
இதை தொழுகைக்காக வந்தவர்கள் பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளனர். இது தொடர்பாக காவல்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்ட நிலையில் அவர்கள் உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்று பெண்ணின் சடலத்தை மீட்டு பிரதே பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்திய நிலையில் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்து பிணத்தை அங்கு வீசி இருக்கலாம் என்று சந்தேகிக்கிறார்கள்.