திமுக கட்சியில் இருந்து முக அழகிரி மற்றும் அவருடைய ஆதரவாளர்கள் கடந்த 2014 ஆம் ஆண்டு நீக்கப்பட்டனர். அதாவது ஒழுங்கு  நடவடிக்கையின் காரணமாக அவர்கள் கட்சியிலிருந்து நீக்கப்பட்ட நிலையில் தற்போது முக அழகிரியின் ஆதரவாளர்கள் திமுக மேல் இடத்திற்கு மன்னிப்பு கடிதம் எழுதி அனுப்பியுள்ளனர். அவர்கள் தங்களை மீண்டும் கட்சியில் இணைத்துக் கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளனர்.

அதாவது தம்பியுடன் இணக்கமாக செல்ல அழகிரி விரும்புவதாகவும் இதன் காரணமாக அவர் மீண்டும் கட்சியில் சேர்த்துக் கொள்ளப்பட அதிக வாய்ப்புகள் இருப்பதாகவும் கூறப்படுகிறது. அதே சமயத்தில் அவரை கட்சியில் சேர்க்கக்கூடாது என்று சில நிர்வாகிகள் கூறுவதாகவும் பேசப்படுகிறது. மேலும் சமீபகாலமாக நடக்கும் சம்பவங்களின் அடிபடையில் முக அழகிரி விரைவில் திமுக கட்சியில் இணையலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.