திமுக கட்சியின் மூத்த நிர்வாகி ஈ. கோதண்டம் நேற்று வயது மூப்பு மற்றும் உடல்நல குறைவினால் காலமானார். இவர் ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் எம்எல்ஏவாக இருந்துள்ளார். இவர் இரு முறை எம்எல்ஏவாக இருந்த நிலையில் வயது 99 ஆகிறது. இவர் கடந்த சில மாதங்களாக உடல் நலக்குறிவினால் அவதிப்பட்ட நிலையில் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். அவர் உடல் நலக்குறைவினால் இறந்த நிலையில் திமுக நிர்வாகிகள் பலரும் இரங்கல் தெரிவித்து வரும் நிலையில் இன்று  இறுதிச்சடங்கு நடைபெற இருக்கிறது.

இந்நிலையில் தமிழக முதல்வர் ஸ்டாலின் கோதண்டம் மறைவுக்கு தற்போது இரங்கல் தெரிவித்துள்ளார். திமுக முன்னால் எம்எல்ஏ கோதண்டம் மறைந்த செய்தியை கேட்டு மிகுந்த வேதனை அடைந்தேன். அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்த அவர் திறம்பட மக்கள் பணி செய்தவர் என்றும் புகழாரம் சூட்டியுள்ளார்.