தற்போது தொடங்கியுள்ளது. திமுக எம்எல்ஏ புகழேந்தி கடந்த ஏப்ரல் மாதம் உயிரிழந்ததை தொடர்ந்து விக்ரவாண்டி தொகுதிக்கு வருகின்ற ஜூலை 10ஆம் தேதி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. விழுப்புரம் மாவட்ட ஊராட்சி குழு தலைவர் ஜெயச்சந்திரன், விவசாய தொழிலாளர் அணி செயலாளர் அன்னியூர் சிவா பெயர்கள் பரிசீலனை செய்யப்பட்டுள்ளன. அதனைப் போலவே புகழேந்தியின் மருமகள் பிரசன்னா தேவியும் போட்டியிட விருப்பம் தெரிவித்துள்ளார். அதிமுக சார்பாக கடந்த முறை போட்டியிட்டு தோல்வியடைந்த முத்தமிழ் செல்வனுக்கு வாய்ப்பு வழங்கப்படும் என்று தெரிகிறது.

விக்கிரவாண்டி தொகுதியில் கடைசி 13 ஆண்டுகளில் ஐந்தாவது முறையாக தேர்தல் நடைபெற உள்ளது. தொகுதி மறு சீரமைப்புக்கு பிறகு 2011, 2016, 2019 (இடைத்தேர்தல்), 2021 ஆம் ஆண்டு தேர்தல் நடைபெற்ற நிலையில் தற்போது மீண்டும் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தொகுதியில் இதுவரை நடைபெற்ற தேர்தல்களில் திமுக 7 முறையும் அதிமுக 6 முறையும் வெற்றி பெற்றுள்ளது. பாமகவுக்கு இந்த தொகுதியில் தனி செல்வாக்கு உள்ளது குறிப்பிடத்தக்கது.