
உத்திரபிரதேச மாநிலத்தில் உள்ள குஷி நகர் பகுதியில் இருந்து கத்தாவுக்கு சிலர் காரில் சென்று கொண்டிருந்தனர். அதாவது ஒரு திருமண நிகழ்ச்சிக்கு காரில் சென்று கொண்டிருந்தபோது திடீரென நள்ளிரவில் பயங்கர விபத்து ஏற்பட்டது.
திடீரென ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த கார் ஒரு மரத்தின் மீது மோதியதில் அப்பளம் போல் நொறுங்கியது. இந்த கோர விபத்தில் 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி 3 பேர் உயிரிழந்தனர். இதனால் பலி எண்ணிக்கை 6 ஆக உயர்ந்தது. மேலும் இந்த விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.