திருவண்ணாமலை தீப திருவிழா அன்று மலையேறும் பக்தர்களுக்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. நவம்பர் 26ம் தேதி கார்த்திகை தீப திருநாளை முன்னிட்டு திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்வார்கள். அதே சமயம் மலையேறும் பக்தர்களுக்கும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.

அதன்படி 2500 பக்தர்கள் மட்டுமே மலையேற நிபதனைகளுடன் அனுமதி. 18 முதல் 60 வயது உள்ளவர்கள் மட்டுமே அனுமதி. கோபுரம் அருகில் உள்ள வழியில் மலை ஏற அனுமதி, மற்ற வழிகளில் மலை ஏறக்கூடாது. மலையேறும் பக்தர்கள் தண்ணீர் பாட்டிலை தவிர கற்பூரம் மற்றும் பட்டாசுகள் எடுத்துச் செல்ல அனுமதி இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.