
தீபாவளி விடுமுறைக்காக மக்கள் சென்னையில் இருந்து தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல தயாராகி வருகின்றனர். இந்த நிலையில், சென்னையில் இருந்து நெல்லைக்கு கூடுதலாக ஒரு வந்தே பாரத் ரயில் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. வரும் நவம்பர் 9ஆம் தேதி காலை 6 மணிக்கு சென்னையில் இருந்து புறப்படும் வந்தே பாரத் ரயில் பிற்பகல் 2 மணிக்கு நெல்லையை அடையும். மறுமார்க்கத்தில் பிற்பகல் 3 மணிக்கு நெல்லையில் இருந்து புறப்படும் இந்த ரயில் இரவு 11 மணிக்கு சென்னையை அடையும். அதே நாளில் பிற்பகல் 2:50 மணிக்கு வழக்கமாக இயங்கும் வந்தே பாரத் ரயிலும் சேவை வழங்கும்.