
தேசிய மகளிர் ஆணைய உறுப்பினராக இருக்கும் குஷ்பு சுந்தர் பதவியில் இருந்து விலகினார். தீவிரமாக அரசியலில் இறங்குவதற்கு இந்த பதவி தடங்கலாக இருப்பதாக அவர் கூறினார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது, கடந்த சில மாதங்களாகவே நாட்டில் நடக்கும் விஷயங்களுக்கு எனது கருத்துக்களை தெரிவிக்கவும், எதிர்வினை ஆற்றவும் முடியவில்லை. அதற்கு இந்த பதவி தடங்கலாக இருப்பதை நான் உணர்ந்தேன். அதனால் நான் நன்றாக யோசித்த பின்னரே இந்த முடிவை எடுத்தேன்.
இதை நான் முறைப்படியாக ஆணையத்தின் தலைவர் மற்றும் எனது கட்சியின் மேலிடத்தில் கூறிய பின்னரே பதவி விலகல் கடிதம் கொடுத்தேன். இனி ஒரு அரசியல்வாதியாக எனது கருத்துக்களை வெளிப்படையாக கூற முடியும். என்னுடைய இந்த முடிவுக்கு கட்சி ரீதியாகவோ இல்லையெனில் வெளியிலிருந்தோ அழுத்தம் கொடுக்கவில்லை.
இதனால் திமுகவிற்கு பயம் வந்துள்ளது. அந்த பயம் இருக்கட்டும். அவர்கள் கண்ணாடி வீட்டில் இருந்து கல் எரிகின்றார்கள். அது விரைவில் உடைந்து விடும் என்று அவர் கூறினார்.