
திருப்பத்தூர் மாவட்டத்தை சேர்ந்த ராஜேஷ்குமார் என்ற நபர் சாரை பாம்பின் தோலை உரிப்பது போன்ற வீடியோ ஒன்றை சமூக வலைத்தளங்களில் பதிவிட்ட நிலையில் அந்த வீடியோ வைரலானது. இதனைத் தொடர்ந்து ராஜேஷ் குமாரை வனத்துறை அதிகாரிகள் கைது செய்தனர்.
பிறகு அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், சாரைப் பாம்பை அவர் சமைத்து சாப்பிட்டது தெரியவந்தது. இதனை தொடர்ந்து வேறு ஏதாவது விலங்குகளை ராஜேஷ் குமார் வேட்டையாடி உள்ளாரா என்பது குறித்து அவரிடம் அதிகாரிகள் தொடர் விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் கிளப்பியுள்ளது.