
பாகிஸ்தானின் ஒகாரா மாவட்டத்தில் நிகழ்ந்த ஒரு கொடூர சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 9-ம் வகுப்பு தேர்வில் தோல்வியடைந்த தனது தங்கையை அவரது அண்ணன் சுட்டுக்கொன்ற சம்பவம் இது. இரவு நேரத்தில் தாய் தூங்கிய பின்னர் தனது தங்கை சஜிதாவிடம் தேர்வில் தோல்வியடைந்தது குறித்து அவரது அண்ணன் உசைன் கேள்வி கேட்டது வாக்குவாதமாக மாறியது.
சத்தம் கேட்டு எழுந்த தாய் சண்டையை நிறுத்தும்படி கூறியும் கேட்காத உசைன் தனது துப்பாக்கியால் தங்கையை சுட்டுவிட்டு தப்பி ஓடினார். பலத்த காயமடைந்த சஜிதா மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்தார். தாயின் புகாரின் பேரில் அவரது மகன் உசைன் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. போலீசார் தலைமறைவான அவரை தேடி வருகின்றனர்.