
ஈரோடு மாவட்டம் சித்தோட்டை அருகே உள்ள கொங்கம்பாளையம், மாதேஸ்வரன் நகரைச் சேர்ந்த பரமேஸ்வரன் (36) என்பவருக்கும், அவரது மனைவிக்கும் கடந்த வெள்ளிக்கிழமை குடும்ப பிரச்சினை காரணமாக தகராறு ஏற்பட்டது. இதில் மனமுடைந்த பரமேஸ்வரன் கோபத்தில் வீட்டை விட்டு வெளியே சென்றுவிட்டார். குடும்பத்தினர் அவரை பல இடங்களில் தேடியும் கண்டுபிடிக்க முடியாமல் தவித்தனர்.
இதனையடுத்து மீண்டும் வீட்டிற்கு திரும்பி வந்த பரமேஸ்வரன் யாருமில்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பரமேஸ்வரனின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.