தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி மீன்பிடிப்பதாக குற்றம் சாட்டி இலங்கை கடற்படை தொடர்ந்து கைது செய்யும் சம்பவங்கள் அரங்கேறி வருகிறது. சமீபத்தில் தமிழக மீனவர்கள் 15-க்கும் மேற்பட்டோரை இலங்கை கடற்படை கைது செய்த நிலையில் தற்போது மீண்டும் 12 மீனவர்களை கைது செய்துள்ளது. அதாவது நெடுந்தேவு அருகே மீனவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்த நிலையில் அங்கு வந்த இலங்கை கடற்படை எல்லை தாண்டி மீன் பிடித்ததாக குற்றம் சாட்டி 12 மீனவர்களை கைது செய்துள்ளது.

மேலும் தொடர்ந்து இலங்கை கடற்படையினர் ‌ தமிழக மீனவர்களை கைது செய்யும் சம்பவங்கள் அரங்கேறி வரும் நிலையில் அவர்களை உடனடியாக விடுவிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தி வருவதோடு மக்களும் கோரிக்கைகளை விடுத்து வருகிறார்கள்.