கொடைக்கானலில் கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்து வருவதால் காட்டாற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. இதனால் கிராமத்தை விட்டு வெளியேற முடியாமல் மக்கள் தவித்து வருகிறார்கள்.  இதனால் மக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கி கிடக்கிறார்கள். இந்நிலையில் கொடைக்கானலில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக கொடைக்கானல் கோடை விழாவில் முக்கிய விழாவாக இன்று நடைபெற இருந்த படகுப் போட்டி ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் ரத்து செய்யப்பட்ட படகு போட்டி மீண்டும் மே 25-ம் தேதி நடைபெறும் என்றும் மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.