
சிஎஸ்கே அணியின் முன்னாள் கேப்டன் தோனிக்கு சென்னை மைதானத்தில் இன்று கடைசி போட்டியாக இருக்கலாம் என்று சொல்லப்படுகிறது. லீக் தொடரில் சென்னை மைதானத்தின் கடைசி போட்டி இன்று நடைபெறுகிறது. ஒருவேளை சிஎஸ்கே அணி பிளே ஆஃப் சுற்றுவதற்கு நுழையாவிட்டால் நடப்பு தொடரில் இதுவே கடைசி போட்டியாக அமையும். தோனி ஓய்வை அறிவித்தால் இன்று தான் அவருக்கு கடைசி போட்டியாக இருக்கும். இதனால் ரசிகர்கள் சோகத்தில் உள்ளனர்.