சென்னை வளசரவாக்கம் பகுதியில் ஹைதரபாத்தைச் சேர்ந்த 30 வயதான துணை நடிகை ஒருவர் வசித்து வருகிறார்.  இந்நிலையில் நேற்று  முன்தினம் நள்ளிரவு வீட்டில் தனியாக இருந்த போது, திடீரென வீட்டிற்குள் வந்த 6 பேரில் ஒருவர் மட்டும் கத்தியை காட்டி மிரட்டி பலாத்காரம் செய்துவிட்டு தப்பிச் சென்றதாக கூறப்படுகிறது.

இதனையடுத்து பாதிக்கப்பட்ட நடிகை  போலீசில் புகார் அளித்த நிலையில் முருகேசன் மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்த 5 பேர் கைது செய்யப்பட்டனர். முருகன் என்பவர் பிரபல நடிகர் ஒருவரது கார் ஓட்டுநர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.